tamilnadu

பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா

திருப்பூர், மார்ச் 15- திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 610 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் ஆண்டு விழா பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் பட்டு லிங்கம் தலைமையில் பறை இசை முழக்கத்துடன் துவங்கி நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் கும்மி, தேவராட்டம், கோலாட்டம், கரகாட்டம், சலங்கையாட்டம் மற்றும் சக்கை குச்சி ஆட்டம், உருமி என நாட்டுப்புற நடனங்களும் சிலம்பம், பறை, கராத்தே என பாராம்பரிய நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. கலப்பை, முளைப்பாரி, விதை நெல் போன்றவை பெற்றோர்களின் பங்களிப் போடு இடம் பெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு எஸ்டீ எக்ஸ்போர்ட்ஸ் நிர் வாக இயக்குனர் திருக்குமரன் முன்னிலை வகித் தார். வட்டாரக் கல்வி அலுவலர் விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி மாணவ, மாண வியருக்கு எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுப்பொருட்களை லீலாவதி திருக்குமரன் வழங்கினார். ஒவ்வொரு வகுப்பிலும் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பிலான பரிசுகளை பெற்றோர்களையும் அழைத்து கெளரவப்படுத்தி சுப்ரீம் பேரடைஸ் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். நிறைவாக ஆசிரியர் மணிகண்ட பிரபு நன்றி கூறினார்.