திருநெல்வேலி, ஜூலை 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றி யம் மந்தியூர் ஊராட்சி வாகைகுளம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் அணைக்கரைமுத்து (72). விவசாயியான இவர் தனது குடும்பத்தினருடன் வாகைகுளத்தில் வசித்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள தனக்குச் சொந்தமான தோட்டத்தில் காய்கறிகள், கிழங்கு பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள் ளார். மேலும் தனது தோட்டத்தில் விளையும் காய்கறி கீரை உள்ளிட்ட வற்றை தானே வண்டியில் கொண்டு சென்று விற்று வந்துள்ளார். இந்நிலையில் ஜூலை 22 இரவு சுமார் 11.30 மணியளவில் வனத்துறை யினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் வீட்டில் தனியாகப் படுத்திருந்த அணைக்கரைமுத்துவை தோட்டத் தைச் சுற்றிலும் அனுமதியின்றி மின்வேலி அமைத்துள்ளதாகக் கூறி விசாரணைக்கு வருமாறு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து 12 மணி சுமாருக்கு சீருடையில் இருந்த வனத்துறையினர் சிலர் அணைக் கரைமுத்து வீட்டிற்குச் சென்று அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், அவருக்கு மேல்சட்டைத் தருமாறும் கேட்டு வாங்கிச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் வனத்துறையி னரிடம் இருந்து வந்த போனில் அணைக்கரை முத்துவிற்கு உடல் நிலை சரியில்லை என்று தகவல் வந்ததையடுத்து அணைக்கரை முத்துவின் மூத்த மகன் நடராஜன் மற்றும் மருமகன் இருவரும் வனத் துறை அலுவலகத்திற்குச் சென்றுள் ளனர். ஆனால் அவர்கள் செல்லும் போது வனத்துறை ஜீப்பில் அணைக்கரைமுத்துவை ஏற்றி எதிரில் வந்துள்ளனர். அப்போது நடராஜன், அணைக்கரை முத்துவைப் பார்த்த போது பேச்சு மூச்சின்றி இருந்துள்ளார். உடல் குளிர்ந்த நிலையில் இருந்துள்ளது. உடனடியாக கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது அங்கு உட னடியாக தென்காசி அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்து வர்கள் சோதனை செய்து அணைக்க ரைமுத்து உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடராஜனிடம் அணைக்கரைமுத்து நெஞ்சு வலி வந்து உயிரிழந்ததாகவும், வனத் துறையினர் தாக்குதலில் உயிரி ழக்கவில்லை என்றும் எழுதி வாங்கி யுள்ளனர். மேலும் இது குறித்து தக வலறிந்ததும் உறவினர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் நெஞ்சுவலியில் இறக்க வாய்ப்பில்லை என்றும், வனத்துறை தாக்குதலில் தான் அணைக்கரைமுத்து உயிரிழந்துள் ளார் என்றும் கூறி ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆழ்வார்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி கார்த்திகேயன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அணைக் கரைமுத்து உறவினர்களிடம் விசாரணை நடத்தியதோடு, அணைக்கரைமுத்து உடலைப் பார்வையிட்டு 18 காயங்கள் இருப்ப தாகக் கூறி உறவினர்களிடம் கையெ ழுத்து வாங்கியுள்ளார்.
மேலும் மாலை 6 மணியான தால் மறுநாள் உடற்கூறு ஆய்வு செய்யலாம் எனக் கூறியதைய டுத்து உறவினர்கள் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். ஆனால் இரவு 8 மணிக்கு மேல் அணைக்கரைமுத்து உடலை உடற்கூறு ஆய்வு செய்துள் ளனர். இது குறித்து ஜூலை 24 காலை தகவலறிந்த உறவினர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அணைக்கரை முத்து உடலை வாங்க மறுப்புத் தெரிவித்தனர். தகவலின்றி யாரும் இல்லாத நேரத்தில் உடற்கூறு பரிசோ தனை நடைபெற்றதால் அதில் நம்பிக்கை இல்லை என்றும் மறு உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் வனத்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் தொடர்ந்து கெடுபிடி செய்து வந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை தமிழக முதல்வர் அணைக் கரைமுத்து குடும்பத்திற்கு நிவார ணமாக ரூ.10 லட்சம் மற்றும் ஒரு வருக்கு அரசு வேலைத் தருவதாக அறிவித்த போது அதை ஏற்க மறுத்து, வனத்துறையினர் மீது நடவடிக்கை யை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடையம் வனச்சரக அலுவல ராக பணியாற்றிய நெல்லை நாய கம் கடையம் வனச்சரகத்திற்குப் பணிக்கு வந்ததிலிருந்து விவ சாயிகள், கிராமமக்கள், இளை ஞர்கள் மீது வேட்டையாடுவதாகவும், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவ தாகவும் கூறி கடுமையான நடவ டிக்கை எடுத்து வந்துள்ளார். விசாரணைக்காக அழைத்துச் செல்லும் இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை வனத்துறையினர் செய்துள்ளனர்.
இவ்வாறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்க ளுக்கு 20, 25, 50 ஆயிரம் என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வயலில் காட்டுப் பன்றிகள் தொந்தரவைத் தடுக்க காவல் இருக்கும் விவசாயி கள் நாய்களைக் கூட்டிச் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு, வீட்டில் கிளி வளர்ப்பவர்களுக்கு அபராதம், வனப்பகுதி அருகில் இருப்பவர்கள் வீட்டில் நாய் வளர்க்கத் தடை இப்படி பல்வேறு அடக்குமுறைகளை விவ சாயிகள் மீதும், கிராம மக்கள் மீதும் கட்டவிழ்த்துள்ளார். இதையடுத்து விவசாயிகள் வனச்சரக அலுவலகத்தை முற்றுகை யிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஆனால் இது வரை எந்த ஒரு வனத்துறை மேலதிகாரியும் விவசாயிகளிடம் பேச்சு நடத்த வில்லை. வனத்துறை சார்பில் மலை யடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகள் செயலற்றுப் போன நிலையில் வனவிலங்குகள் கிரா மங்களுக்குள்ளும், விவசாய நிலங்க ளுக்குள்ளும் புகுந்து அட்டூழியம் செய்த நிலையில் இது குறித்து முறையிட்ட விவசாயிகளிடம் தேவை யென்றால் மானியத்தில் அரசு வழங்கும் மின்வேலியை தங்கள் வயலைச் சுற்றி அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறித் தட்டிக் கழித்துள்ளார்.
தொடர்ந்து 4 பருவங்களாக விவசாயம் பொய்த்துப் போன நிலையில் பாதி மானியத்தில் மின் வேலி அமைக்கவும் முடியாமல், காட்டுப் பன்றி, மிளா உள்ளிட்ட விலங்குகளை விரட்டவும் முடியா மல் விவசாயிகள் பெரும் அவதிக் குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற விவசாயி அணைக்கரைமுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது உயிரி ழப்பிற்குக் கண்டிப்பாக வனத்துறை யினர் பொறுப்பேற்க வேண்டும். அவரது உயிரிழப்பிற்குக் காரண மான வனச்சரகர் நெல்லை நாயகம் உள்ளிட்ட வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி முத்து குடும்பத்திற்கு 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.