tamilnadu

img

ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது கிரிமினல் வழக்குப்பதிவு

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்த புகாரில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் மீது புகார் எழுந்தது. தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி இன்று பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை அதிகாரி அமுதா ஐபிஎஸ் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர். இதனிடையே, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் மீது திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 324, 326, 506-1 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.