tamilnadu

காரில் திடீரென தீ

 தூத்துக்குடி, ஆக.25- தூத்துக்குடி விவிடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். இவர் ஞாயிறன்று பிற்பகலில் அண்ணாநகர் பகுதி யில் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீ ரென காரில் இருந்து புகைகிளம்பி, மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு, காரிலிருந்து இறங்கி னார்.  இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வாளர் வணங்காமுடி தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.