தூத்துக்குடி,ஜூலை 2- சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகனேஷ், பால கிருஷ்ணன், தலைமைக் காவ லர் முருகன், காவலர் முத்து ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வியாழக்கிழமையன்று அதிகாலை 12.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.சி.ஐ.டியின் ஐ.ஜி. சங்கர், “சி.பி.சி.ஐ.டி. இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதில் ஒன்றை கொலை வழக்காக பதிவு செய்து ஒரு உதவி ஆய்வா ளர் கைது செய்யப்பட்டுள் ளார். இந்த சம்பவத்தில் ஈடு பட்ட வேறு சில அதிகாரிகள் பற்றி நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். விசார ணைக்கு பிறகு உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெய ராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில் பட்டி உரிமையியல் நீதிபதி பாரதிதாசன் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகை யில் வைத்து சாத்தான்குளம் காவல்நிலைய எழுத்தர் பியூலா செல்வக்குமாரியிடம் 4 மணி நேரம் நடைபெற்று வந்த விசாரணை நிறை வடைந்தது. சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்ட தை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த நெடுங்குளம் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை அப்ரூவராகிறார்?
தந்தை-மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை அப்ரூவராகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே தலைமை காவலர் ரேவதி அப்ரூவராக மாறிய நிலையில் சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையும் அப்ரூவராகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.