தூத்துக்குடி, ஜூன் 15- போலி இ-பாஸ் மூலம் வருபவர்களை தடுப்ப தற்காக மாவட்ட எல்கை பகு திகளில் க்யூஆர் ஸ்கேனர் வசதி அறிமுகம் செய்யப்பட் டுள்ளது என மாவட்ட ஆட்சி யர் சந்தீப் நந்தூரி தெரி வித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று செய்தியா ளர்களை சந்தித்த அவர் கூறி யதாவது: தூத்துக்குடி மாவட்டத் தில் இதுவரை 16,536 பேருக்கு கொரோனா பரி சோதனை செய்யப்பட்டது. இதில் 398 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 3 பேர் இறந்துள்ளனர். 316 பேர் குணமடைந்து வீடு திரும் பியுள்ளனர். திங்களன்று மதியம் வரை 95 பேர் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 20 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட் டுள்ளது. மகாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநி லங்களில் இருந்து 398 பேர் தூத்துக்குடி வந்துள்ளனர். இதில் 185 பேர் தனிமைப்ப டுத்தப்பட்டனர். கடந்த 2 வார காலத்தில் துக்கவீடு, திருமண வீட்டிற்கு வந்த வர்கள் மூலம் 89 பேருக்கு கொ ரோனா தொற்று ஏற்பட்டுள் ளது. குறிப்பாக தென்தி ருப்பேரை, காயல்பட்டணம் ஆகிய பகுதிக்கு அதிகம் பேர் வந்துள்ளனர்.
இவர்களுடன் நேரடி தொடர்புடைய 50 பேருக்கு ரத்த மாதிரி எடுக் கப்பட்டுள்ளது. கடந்த மே 4 முதல் 3568 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ளனர். இதில் மகாராஷ்ட்ராவில் இருந்து மட்டும் 2685 பேர் வந்துள்ள னர். இதில் 158 பேர் தனி மைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னையில் இருந்து மே 4 முதல் திங்களன்று வரை 8396 பேர் வந்துள்ளனர். விமானம் மூலம் மற்ற மாவ ட்டங்களில இருந்து சுமார் 16,000 பேர் தூத்துக்குடி வந்து ள்ளனர். கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு நபருக்கு தூத்து க்குடி அரசு மருத்துவ மனையில் அவசரமாக அறு வை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்தது, இதனால் 3 மருத்துவர்களுக்கு கொ ரோனா தொற்று ஏற்ப ட்டுள்ளது. தூத்துக்குடியில் சளி மாதிரி பரிசோதனை செய்ய ஏற்கனவே ஒரு எந்தி ரம் உள்ள நிலையில், ரூ.15 லட்சம் செலவில் மேலும் ஒரு எந்திரம் வாங்கப்பட் டுள்ளது. தூத்துக்குடியில் வெளி மாவட்டம், வெளி மாநி லங்களில் இருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுகிறது. வெளி மாவட்டங்களில் பைக்குகளில் வரும் சில நபர்கள் சோதனைச்சா வடியில் சோதனைக்கு உட்ப டாமல் ரகசியமாக ஊருக்குள் நுழைந்து விடுகின்றனர்.
இதனால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதி யில் புதிதாக வந்த நபர்கள் குறித்து காவல்துறைக்கோ, சுகாதார துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளி ப்பதற்காக தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்து வமனைகளில் 1500 படு க்கைகள் தயார் நிலையில் உள்ளன. திருச்செந்தூர், விளாத்திகுளம், திரு வைகுண்டம் ஆகிய 3 இட ங்களில் தனிமைப்படுத்தும் மையம் தயார் நிலையில் உள்ளது. போலி இ-பாஸ் மூலம் வருபவர்களை தடுப்ப தற்காக மாவட்ட எல்கை பகு திகளில் கியூஆர் ஸ்கேனர் வசதி அறிமுகம் செய்யப்ப ட்டுள்ளது. இதில் ஸ்கேன் செய்யும்போது போலி எனத் தெரியவந்தால் சம்பந்த பட்ட நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் கூறி னார்.