tamilnadu

img

திருவாரூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

திருவாரூரில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட மேல வட போக்கி தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் உந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தனியார் வாகனத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட கழிவு நீர், சட்ட விரோதமாக பாதாள சாக்கடை குழிக்குள் வெளியேற்றப்பட்டது. அப்போது தனியார் கழிவுநீர் வாகனத்தின் ஓட்டுனரான மணிமாறன் (வயது 30) வழுக்கி பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்றுவதற்காக அருணாச்சலம் (வயது 27) என்பவரும் தவறி பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார். 
உடனடியாக அவர்கள் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கே இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து இருவரது உடலையும் உடற்கூறாய்வுக்கு கொண்டு போது உறவினர்கள் திரண்டதால் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, தொடர்ந்து இருவது உடலையும் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவ குறித்து திருவாரூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.