tamilnadu

img

எம்பி ஊதியம் பிடித்தம்- தொகுதி நிதி ரத்து: திருமாவளவன் எதிர்ப்பு

சென்னை, ஏப். 7- கொரோனா தடுப்பு நட வடிக்கைகளுக்காக நாடாளு மன்ற உறுப்பினர் களின் சம்பளத்தில் 30 சதவீத்தைப் பிடித்தம் செய்யப்போவதாக தன்னிச்சையாக முடி வெடுத்து மத்திய அரசு அவ சர சட்டம் இயற்றியிருப்பது, இந்த நாடு ‘பொருளாதார அவசரநிலையை’ நோக்கிப் போகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஜனநாயக நடைமுறைகளுக்கு முர ணான இந்த அவசர சட் டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின்  சார்பில் வலியுறுத்துகிறோம்.

இது குறித்து திருமாவள வன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசின் கணக்கிற்கும் ஓரிரு மாதங்களுக்கான ஊதியத்தை வழங்குங்கள் என நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்குக் கூறியிருந் தால் அதிலே ஒரு நியாய முள்ளது. ஆனால் உறுப்பி னர்களின் கருத்தையறியா மல் மத்திய அரசே தன்னிச்  சையாக சம்பளத்தைக் குறைத்து அவசர சட்டம்  பிறப்பித்திருப்பது நாடாளு மன்ற ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும். நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டு களுக்கு ரத்து செய்து அந்தத் தொகையை ஒருங்கி ணைந்த நிதியில் சேர்த்தி ருப்பதும் ஜனநாயக அணுகு முறை இல்லை. இது எவ் வகையிலும் ஏற்புடையது அல்ல. என்று அதில் அவர் மேலும் கூறியுள்ளார்.