தேனி, ஜூலை 15- தேனி மாவட்டத்தில் மருத்து வர், கல்லூரி பேராசிரியர் ,செவிலி யர் என 65 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தனர். உத்தமபாளையம் தனியார் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த பாளையம் தர்மர் கோவில் தெரு வைச் சேர்ந்த 42 வயது செவிலி யர், பாளையம் தனியார் கல்லூரி யில் பணிபுரியும் 40 வயது பேராசிரி யர், பழனிசெட்டிபட்டியை சேர்ந்த 42 வயது பெண் மருத்துவர் ஆகி யோருக்கு கொரோனா உறுதி யானது. போடி திருமலாபுரம், புக ழேந்தி தெருவை 23 வயது வாலி பர், சங்கதன் தெருவை சேர்ந்த 47 வயது நபர் ,பங்கஜம் பிரஸ் பின்புறம் கணவன் -மனைவி என இருவருக்கும் அப்பர் தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கும் வஉசி தெரு ஒழுகால் பாதையில் குடியிருக்கும் 28 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தேனி அருகே அரண்மனைப் புதூர் வசந்த நகரை சேர்ந்த 30 வயது, 50 வயது பெண்கள், முல்லை நகரில் 49 வயது நபர், கோடாங்கிபட்டி தென்றல் நகரை சேர்ந்த 43 வயது நபர், கொடு விலார்பட்டி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த 4 பேருக்கும் ,பழனிசெட்டி பட்டி பெரிய தெருவில் 40 வயது நபருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தேனி அருகே வட புதுப்பட்டி யில் தனியார் பொறியியல் கல் லூ0ரியில் பணிபுரியும் 38 வயது பெண் துப்பரவு பணியாளர், அன் னஞ்சி நடுத்தெருவை சேர்ந்த 52 வயது வியாபாரி ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட் டுள்ளது. மதுரையில் தனியார் மருத்துவமனைகளில் பரி சோதனை செய்த கம்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி பாப்பம்மாள் புரத்தை 60 வயது கணவன் ,56 வயது மனைவி ,உட்பட 6 பேர் உட்பட 65 பேருக்கு தேனி மாவ டடம் முழுவதும் கோரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1983 ஆக உயர்ந் துள்ளது 4 பேர் பலி தேனி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் 10 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கம்பம் அருகே ஆங்கூர் பாளையத்தை சேர்ந்த 45 வயது நபர், 8 ஆம் தேதி அனுமதிக்கப் பட்ட தேனி என்.ஆர் .டி நகரை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஆகி யோர் செய்வாய்க்கிழமை சிகி ச்சை பலனின்றி உயிரிழந்தனர். 10 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட கம்பம் சையது முகமது தெருவை சேர்ந்த 72 வயது முதியவர், கடந்த 8 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட போடியை சேர்ந்த 43 வயது நபர் ஆகியோர் புதன்கிழமை உயி ரிழந்தனர். இதனைத்தொடர்ந்து எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.