tamilnadu

img

பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூலை 18-  கோவை சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது நள்ளிரவில் சிலர் காவி சாயம் ஊற்றி அவமதித்ததை கண்டித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோ வில் கடைத்தெருவில் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக நாச்சியார்கோவில் நகர தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். திராவிட கழக நிர்வாகிகள் கு.நிம்மதி கௌ தமன் வழக்கறிஞர் ரமேஷ் குண சேகரன், பெரியார் திராவிடர் கழகம் சோலை மாரியப்பன் கரி காலன் வெங்கடேசன், திமுக பூபதி உமாசங்கர் கலியமூர்த்தி,  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ராஜ்முகமது, அமீன் தேமு திக மகேஷ், விடுதலை சிறுத்தை சங்கர், மக்கள் உரிமை கூட்டணி சாத்தையன் அன்பழகன், மதி முக தில்லை பாண்டுரங்கன் உள் ளிட்டோர் ஆர்ப்பாட்டம் செய்த னர்.
தஞ்சாவூர் 
இதே போல் தஞ்சை மாவட் டம் பேராவூரணியில் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு திராவிடர் கழக நகரத் தலை வர் குழ.அரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் இரா. நீலகண்டன், ஒன்றியத் தலை வர் தமிழ்ச்செல்வன், தமிழக மக் கள் புரட்சி கழக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு.நீல கண்டன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம், தா.கலைச்செல் வன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சேக் இப்றாம்சா, விடு தலை சிறுத்தைகள் கட்சி மைதீன், சேக் அப்துல்லா, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி பன்னீர்செல்வம், ராஜமாணிக்கம், கருப்பையா, அறநெறி மக்கள் கட்சி ஆயர் ஜேம்ஸ் மதிமுக குமார்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் ரெங்கசாமி, தமிழ்வழிக் கல்வி இயக்கம் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், திராவிட முன்னேற்றக் கழகம் அப்துல் மஜீத், ஆனந்தராஜ், தமிழக மக்கள் விடுதலை இயக் கம் முனைவர் ஜீவானந்தம், விதைநெல் இலக்கியக் கூடம் புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.