கும்பகோணம், ஜூன் 2- தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டு கைத்தறி நெசவாளர்கள் 144 தடை உத்தர வால் வேலையின்றி வருமானமின்றி வாழ்வா தாரமின்றி இருக்கும் நெசவாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்கக் கோரி திருபுவனம் சிட்கோ நகரில் உள்ள கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பாக திங்கள் காலை சிஐடியு, ஏஐடியுசி, தமாக மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நெசவாளர்கள் ஆர்ப்பாட் டத்தை முடித்து விட்டு கைத்தறி உதவி இயக்கு னர் அலுவலரை சந்தித்து மனு கொடுத்து விட்டு காவல்துறை முன்னிலையில் அமைதி யாக நெசவாளர்கள் கலைந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அந்த இடத்திற்கு வந்த அதிமுக நகர செயலாளர் செல்வ ராஜ் மற்றும் ரமேஷ்குமார், வைரவேல், தியாக ராஜன், ராஜசேகர், வெங்கடேஷ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனை வரையும் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க வந்தனராம். ஒருவருக்கொருவர் வார்த்தை தடித்ததால் கலவரத்தை தடுக்கும் பொருட்டு ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த நெசவாளர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
இது குறித்து தமாக சிஐடியு ஏஐடியுசி சங்க கூட்டமைப்பு சார்பில் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப் பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் விசா ரித்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரி வித்தனர். இதுகுறித்து இக்கூட்டமைப்பின் சார்பில் தெரிவித்ததாவது, ஜனநாயக முறை யில் அமைதியாக போராடிய நெசவாளர்கள் மீது வன்முறை அராஜகம் செய்ய முற்பட்ட ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் மீது சட்டப் படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு மென தமிழக அரசை அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது.