தஞ்சாவூர், ஜூன்.3-பேராவூரணி குமரப்பா பள்ளியில் திருவாசகம் முற்றோதுதல் பாராயணம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளிஅறங்காவலர்கள் அஸ்வின் ஸ்ரீதர், உஷா ஸ்ரீதர் ஆகியோர்முன்னிலை வகித்தனர். குருவிக்கரம்பை அரசு மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் வரவேற்றார். தமிழ்நாடு சைவ சமய பயிற்சி மன்றத் தலைவரும், தஞ்சாவூர் அப்பர் தமிழ்மன்ற தலைவர் நல்லாசிரியர் ஆம்பல் முருக.வைத்திலிங்கம், செயலாளர் நல்லாசிரியர் குரு புவனசுந்தரலெட்சுமி ஆகியோருடன் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பெற்றோர், மாணவர் நலன் வேண்டி காலையில் 9 மணிக்கு தொடங்கிய திருவாசகம் முற்றோதுதல் பாராயணம் மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. பள்ளி முதல்வர் சுரேஷ், அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ஸ்ரீபிரியா நன்றி கூறினார்.