tamilnadu

சலூன் கடைகள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்

தஞ்சாவூர், ஜூலை 2 -  பேராவூரணியில் சலூன் கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார மருத்து வர் சங்கம் (முடி திருத்துநர்)  ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. சங்கத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். சங்க காப்பாளரும், மாநில பொருளாளருமான செ.மதி வாணன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், “தமிழக  அரசு கொரோனா பரவ லைக் கட்டுப்படுத்த பொது முடக்கத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், கொ ரோனா தொற்று ஏற்பட்டு ள்ளதை தொடர்ந்து, பொது  சுகாதாரம் மற்றும் வாடி க்கையாளர் நலன் கருதி, காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடை களை திறந்து செயல்ப டுத்துவது” என முடிவு செய்யப்பட்டது.  இக்கூட்டத்தில் பேராவூ ரணி வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கடை உரிமை யாளர்கள் கலந்து கொண்டனர்.