தஞ்சாவூர், செப்.2- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த வீரி யங்கோட்டை- உடையநாடு ராஜராஜன் பள்ளி மாண வர்கள் 10 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரித்து, பொது மக்க ளுக்கு வழங்கியதுடன், ஆற்றங்கரையோரம், குளக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடவு செய்யப்பட்டது. இதை பள்ளித் தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் ஆலோ சனையின்படி, ராஜராஜன் பள்ளி மாணவர்கள் பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செய்தனர். மேலும் நெகிழிப் பையை ஒழிக்கும் விதமாக ஆசிரி யைகளுடன் இணைந்து, ஆயிரக்கணக்கான காகிதப்பை தயாரித்து சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு வழங்கினர். மேலும் மழைநீர் சேகரிப்பு, டெங்கு காய்ச்சல் உரு வாக்கும் புழுக்கள் மற்றும் நெகிழிப்பை ஒழிப்பு குறித்து உடையநாடு கிராமத்தில் மாணவர்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் நெகிழிப்பை, குப்பை களை அகற்றி கிராமத்தை சுத்தம் செய்தனர். தொடர்ந்து விதைப் பந்துகளை காகிதப் பையில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். ஆசிரியர்கள் முன்னிலையில், மரங்கள் இல்லாத பகுதிகளில் விதைப் பந்துகளை, மாணவர்கள் தூவினர். பள்ளித் தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பேரா வூரணி தென்னை லயன்ஸ் சங்கச் செயலாளர் வ. ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பால முருகன், ஆசிரியர்கள் பிரகாஷ், பாலமுருகன், தங்க பாண்டியன், சீனிவாசன், நிர்மலா, நித்யா கலந்து கொண்ட னர்.