tamilnadu

img

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தஞ்சையில் மாணவர் சங்கத்தினர் கைது

தஞ்சாவூர், டிச.11- மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து, அதனை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்க தஞ்சை நிர்வாகி கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதா மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிறது. இந்தியாவில் இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தும் நோக்கிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள் ளது. குடியுரிமை என்பது மதத்தால் தீர்மானிக்கப்படக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.  இந்த சட்டம் இஸ்லாமியர் அல்லாத பிற மதங்களை சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல் என பல் வேறு அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், ஜனநாயக சக்திகள் இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர்.  இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்திய, மாநில மையங்க ளின் அறைகூவலின் படி, தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச்சங்க கல்லூரி முன்பு மாணவ, மாணவிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  பின்னர், குடியுரிமை திருத்த மசோதா நகலை தீவைத்து எரிக்க முயன்றதாக, இந்திய மாணவர் சங் கத்தின் தஞ்சை மாநகரச் செயலாளர் பி.அருண்குமார் மற்றும் அரவிந்த், சிலம்பரசன், மணிகண்டன், நந்த குமார், ஆனந்தராஜ் ஆகிய 6 பேரை தஞ்சை காவல்துறையினர் கைது செய்தனர்.