tamilnadu

img

சிற்றுண்டி விடுதி திறப்பு

 தஞ்சாவூர், ஜூன் 11- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், சிற்றுண்டி விடுதி நடத்த, வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட விவேகானந்தா மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சிற்றுண்டி விடுதியை, புதன்கிழமை பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தார். பதிவாளர் (பொ) முனைவர் கு. சின்னப்பன், நிதியலுவலர் இரா.குணசேகரன், துணைப் பதிவாளர்கள் கோ.பன்னீர்செல்வம், முனைவர் இரா.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.