tamilnadu

img

காரைக்குடி- திருவாரூர் வழித்தடத்தில் விரைவில் சென்னைக்கான ரயில் சேவை

தஞ்சாவூர், பிப்.27- திருவாரூர்- காரைக்குடி இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக 2006 ஆம் ஆண்டு முதல் இந்த தடத்தில் சென்னைக்கான விரைவு ரயில் சேவை நிறுத் தப்பட்டது. இதில் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவா ரூர் - காரைக்குடி இடையே கழிப்பறை வசதி இல்லாத ஒரு டெமு  ரயில், மொபைல் கேட் கீப்பர்களுடன் இயக் கப்பட்டு வருகிறது. இவ் வழித்தடத்தில் உள்ள 72 ரயில்வே கேட்டுகளுக்கு போதிய நிரந்தர பணியாட்கள் நியமிக்கப்படாத காரணத் தினால், 150 கிமீ தூரத்தை இந்த ரயில் கடக்க ஆறரை மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இதனால் இப் பகுதி மக்களுக்கு இந்த டெமு ரயில் பயனுள்ளதாக இல்லை. மேலும் சென்னைக் கான விரைவு ரயில் சேவை யும் கேட் கீப்பர்கள் நிய மிக்கப்படாததால் இன்னும் இந்த தடத்தில் தொடங்கப் படாமல் உள்ளது. இத்தடத்தில் நீண்ட நாட்கள் ரயில் சேவை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள், வியாபாரிகள் சென்னை மற்றும் நாட்டின் இதர பகுதிகளுக்கு சென்று வர இயலவில்லை. சரக்கு போக்குவரத்தும் நடைபெற வில்லை. சுமார் 700 கோடி செலவில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டும், முறை யான ரயில் போக்குவரத்து துவங்கப்படாத காரணத்தி னால் ரயில்வேக்கு பொருளா தார இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம், திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல ரயில் பாதையில் உள்ள ரயில் உப யோகிப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து, இத்தடத்தில் விரைவில் ரயில் சேவை தொடங்க வலியுறுத்தினர். இந்நிலையில் பல்வேறு முயற்சிகளின் பலனாக இவ் வழித்தடத்தில் தேவைப்ப டும் பணியாளர்களை நிய மிக்க ரயில்வே நிர்வாகம் துவங்கியுள்ளது. முதற்கட்ட மாக 2013 ஆம் ஆண்டிற்கு முன்னர் இத்தடத்தில் பணி யாற்றி தற்போது பல்வேறு இடங்களில் மாற்றுப் பணி யில் பணிபுரிந்து வரும் 39 பணியாளர்களை மீண்டும் இவ் வழித்தடத்தில் பணி யாற்ற திருச்சி கோட்ட பர்ச னல் அதிகாரி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இதனால் விரைவில் இத்தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கப்படும் என தெரிகிறது. இது குறித்து தொடர் போராட்டங்களை முன்னெ டுத்து செல்லும் பட்டுக் கோட்டை ரயில் பயணிகள் சங்க நிர்வாகி எம்.விவேகா னந்தன் கூறுகையில், “விரை வில் சென்னை -காரைக்குடி க்கு ரயில் சேவையினை துவங்க இருக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும்   கூட்டமைப் பின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இத்தடத்திற்கு தேவைப்படும் மற்ற அலுவ லர்கள் மற்றும் பணியாளர்க ளை உடனடியாக நிய மனம் செய்து காரைக்குடி- சென்னை, இராமேஸ்வரம்- சென்னை மற்றும் அந்தியோ தயா, கொல்லம்- வேளாங் கண்ணி விரைவு ரயில்களை யும், மயிலாடுதுறையி லிருந்து திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணி கள் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.