தஞ்சாவூர், ஜூன் 4 கொரோனா நிவாரணம் கோரியும். அதிகரிக்கும் குடும்ப வன்முறைகளுக்கு முடிவு கட்ட கோரியும் மாதர் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடை பெற்றது. தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்து க்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச் செல்வி தலைமை வகித்தார். பூக்காரத் தெருவில் இ. வசந்தி, தஞ்சை ஒன்றியம் வல்லத்தில் ஜி.பார்வதி, தெற்கு பூக்கொல்லையில் எஸ்.வனரோஜா, அம்மா பேட்டை ஒன்றியம் இரா ராமுத்தி ரைக்கோட்டையில் மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, மார்க்கரேட், ஒன்பத்துவேலியில் ஒன்றி யச் செயலாளர் சசிமதி, மதுக்கூர் ஒன்றியம் மூத்தாக்குறிச்சியில் ஒன்றி யச் செயலாளர் கலாவதி, அண்டமியில் ஹேமா ,பாப நாசத்தில் விஜயாள், பட்டுக் கோட்டை ஒன்றியம் கரம்ப யத்தில் சாந்தி, பட்டுக் கோட்டையில் கே.மலர் கொடி, பூதலூர் வடக்கில் பி.கலைச்செல்வி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூதலூர் தெற்கு ஒன்றியம் பூதலூர், செங்கிப்பட்டி, புதுக்குடி, துருசுப்பட்டி, அயோத்திப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் வசந்தா, அஞ்சலி தேவி, மலர்கொடி, காந்தி, குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் தஞ்சை மாவட்டம் பேராவூரணி, ஒரத்தநாடு, திருவோணம், திருவையாறு, அய்யம் பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஏராள மான மாதர் சங்கத் தோழர் கள் கலந்து கொண்டனர்.