தஞ்சாவூர், நவ.6- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சம்பை பட்டினம் கிராமத்தில் கட லோரத்தில் பல தலைமுறை களாக குடியிருந்து வரும் சிறுபான்மை இன மீனவ மக்களுக்கு விதிகளை தளர்த்தி வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என பேரா வூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்த ராசு மீன்வளத்துறை அமை ச்சரை புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்த ராசு, புதன்கிழமை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக் குமாரை நேரில் சந்தித்து, தொ குதி வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். பேரா வூரணி வட்டம் சேதுபாவா சத்திரம் மீனவக் கிராமத்தில், மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதா அறிவித்த வாறு, மல்லிப்பட்டினத்தில் கட்டப்பட்டது போன்ற நவீன மீன்பிடித் துறைமுகத்தை கட்டித் தர வேண்டும். அதில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும். மேலும் சின்னமனை, பிள்ளையார்திடல், திரு வத்தேவன், சேதுபாவா சத்திரம் மற்றும் தேவையான இடங்களில், நாட்டுப்படகு களை பாதுகாப்பாக நிறுத்தும் வகையில், ஆறுகள் கடலில் சென்று கலக்கும் வாய்க்கால்களில் உள்ள சேறு, சக்திகளை அகற்றி தூர்வாரி, ஆழப் படுத்தி தரவேண்டும். இது வரை கஜா புயலால் பாதிக் கப்பட்டு நிவாரணம் கிடைக் கப்பெறாமல் உள்ள 7 படகு களுக்கு உடனடியாக நிவா ரணம் வழங்க வேண்டும். சம்பைபட்டினம் கிராமத்தில் பல தலைமுறைகளாக கட லோரத்தில் வீடு கட்டி குடியி ருந்து வரும் குடும்பங்களை அங்கிருந்து அப்புறப்ப டுத்தாமல், விதிமுறைகளை தளர்த்தி, கருணை அடிப்ப டையில் வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார். கோரிக்கைகளை பரி சீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக் குமார் உறுதி அளித்தார்.