tamilnadu

டாஸ்மாக் கடை வேண்டாம்...! ரேசன் கடை, பள்ளிக் கூடம் திறங்கய்யா...! நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.23- ‘எங்களுக்கு டாஸ்மாக் கடை வேண்டாம்... பிள்ளைகள் படிச்சு நாலெழுத்து தெரிஞ்சுக்க, பள்ளிக்கூடம் வேணும். வயிறார கஞ்சி காய்ச்சிக் குடிக்க ரேசன் கடை திறந்து தாங்க போதும்....’ இது மக்கள் சந்திப்பு இயக்கத்திற்காக, பொதுமக்களை தேடிச் சென்ற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம், உசிலம்பட்டி அப்பாவி மக்கள் சொன்னதுதான் மேலே கண்ட வார்த்தை.  தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், செங்கிப்பட்டி அருகே உசிலம்பட்டி பகு தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். வி.கண்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், சித்திரவேல், கிளைச் செயலாளர்கள் முரளி  அய்யா, பரமசிவம் ஆகியோர் பொது மக்களை நேரில் சந்தித்து பேசி, துண்டுப் பிரசு ரங்களை வழங்கினர்.  அப்போது அங்கிருந்த பெண்கள், பொது மக்களிடம் சிபிஎம் பேசுகையில், “உசி லம்பட்டி மெயின் ரோட்டில், அரசு டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க முயற்சி நடந்து வரு வதாகவும், மதுக்கடை திறப்பதால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே இப்பகுதியில் காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்தப்பட்டார்.

எனவே, இப்பகு தியில் இயல்பு நிலை பாதிக்கும்.  இங்கிருந்து 2 கிமீ தொலைவில், கிள்ளு க்கோட்டையில் உள்ள அரசுப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இத னால், பிள்ளைகள் படிக்க முடியாத நிலை உள்ளது. ரேசன் கடைக்கு நாலைந்து கிமீ தொலைவில் உள்ள துருசுப்பட்டி, காரா சிப்பட்டி பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, “பிள்ளைகள் நாலெழுத்து படிக்க பள்ளிக்கூடமும், வயிறார கஞ்சி காய்ச்சிக் குடிக்க, ரேசன் கடையும் திறந்து தர ஏற்பாடு செய்யுங்கய்யா” என்றனர்.  இதுகுறித்து, சிபிஎம் நிர்வாகிகள் என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி கூறு கையில்,” ஏற்கனவே டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க முயற்சி நடக்கையில், இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்கள் தடுத்த நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் மிரட்டி உள்ளார். பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ரேசன் கடை, பள்ளிக்கூடம் தேவை எனக் கேட்டு ள்ளனர். 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தும், அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர்.  பொதுமக்கள் எதிர்ப்பை மீறி இப்பகு தியில் மதுக்கடை திறக்க அனுமதிக்கக் கூடாது. பெண்கள், மாணவிகள் பாது காப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள, மதுக்க டையை திறக்க முடிவு செய்தால், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம், மாதர் சங்கம் பொதுமக்களைத் திரட்டி போ ராட்டம் நடத்தும். புதிதாக ரேசன் கடை திறக்க வும், பள்ளியை மீண்டும் திறக்கவும் மாவட்ட  ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.  இந்நிலையில், கிராம மக்கள் ஆக.24 (திங்கள்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட தீர்மா னித்துள்ளனர்.