tamilnadu

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் சிபிஎம் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 31- தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தா ளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற் றது. ஒன்றியக் குழு உறுப்பினர் டி.காசி நாதன் தலைமை வகித்தார்.  மாவட்டக்குழு உறுப்பினர் பி.எம். இளங்கோவன், ஒன்றியச் செயலா ளர் பி.சாமிக்கண்ணு ஆகியோர் பேசி னர். விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் டி.ஜி.ராஜேந்திரன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.எஸ். பாரதி, வி.தொ.ச.ஒன்றியப் பொறுப்பா ளர் நடேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.கணேசன் மற்றும் கிளைச் செய லாளர்கள் கலந்து கொண்டனர்.  “தஞ்சாவூரில் ஆகஸ்ட் 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்த ஒத்துழைப் பது, ஒதுக்கப்பட்ட நிதியை வசூ லிப்பது, ஒன்றியத்தில் பத்து இடங்க ளில் மாநாட்டு விளம்பரம் செய்வது, 200-க்கும் மேற்பட்டோர் பத்து வாக னங்களில் சென்று பேரணியில் கலந்து கொள்வது, திருப்பனந்தாள் ஒன்றியம் பரவனூர் கிராமத்தில் மனவளர்ச்சி குன்றிய, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத் காரம் செய்த சம்பவத்தில், அப்பெண் ணுக்கு 5 மாதத்தில் குழந்தை இறந்து பிறந்த நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.  இது தொடர்பாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, ஒருவரை கைது செய்துள்ள னர். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி மீது காவல்துறை கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிதி வழங்க வேண்டும். பெண்ணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.  மேலும், மத்திய அரசின் புதிய தேசிய கல்வி வரைவுக் கொள்கை யைக் கண்டித்து திருப்பனந்தாளில் ஆகஸ்ட் 9-ம் தேதி கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது, இதற்காக கையெ ழுத்து இயக்கம் நடத்துவது” உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.