tamilnadu

உறவினர் வீடு வந்த பெண்ணுக்கு கொரோனா

தஞ்சாவூர், ஜூலை 7- திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் 60 வயதுடைய நப ருக்கு, புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இத ற்கான சிகிச்சை பெற மனைவி, மகனுடன் தஞ்சாவூர் வந்துள்ளனர். அங்குள்ள மருத்து வமனையில், அறுவை சிகிச்சைக்கு முன்ன தாக,  அவருக்கும், மனைவி, மகனுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவு றுத்தி உள்ளனர்.  இதையடுத்து, தஞ்சையில் இருந்து பேரா வூரணி வந்த அவர்கள், எஸ்.என்.வி திருமண மண்டபம் அருகே உள்ள உறவினர் வீட்டில் வந்து தங்கி உள்ளனர். இந்நிலையில் குரு விக்கரம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தின் மூலம் சளிப்பரிசோதனை செய்யப்ப ட்டதில், புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் மனைவியான 56 வயது பெண்ணுக்கு கொ ரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்ப ட்டது. உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைக்கு, அந்தப்பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.