tamilnadu

ஊழியருக்கு கொரோனா...  பேராவூரணி ஸ்டேட் வங்கி ஆக.5 வரை அடைப்பு

தஞ்சாவூர், ஜூலை 29- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி முதன்மைச் சாலை யில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை இயங்கி வரு கிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு  பணியில் சேர்ந்த, பட்டுக்கோட்டையில் இருந்து வந்து செல்லும், 29 வயதுடைய காசாளருக்கு கடந்த சில நாட்க ளாக காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு சளிப் பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இந்நிலையில் தகவல் தெரிந்ததையடுத்து, புதன்கிழமை வங்கி மூடப்பட்டது. இதனால் பணிக்கு வந்த ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களும், தகவல் அறிந்து திரும்பிச் சென்ற னர். “ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று காரண மாக ஆக.5 ஆம் தேதி வரை வங்கி செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என வங்கி நிர்வாகம் சார்பில் அறி விப்பு வெளியிட்டுள்ளது.