தஞ்சாவூர், ஜூன் 6- தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே இரண்டாம் ்புளிக்காட்டை சேர்ந்தவர் கதிரவன் (30), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா (26). இவர்களுக்கு வருனிகாஸ்ரீ (7), ஜனனிகாஸ்ரீ (5) என இரண்டு குழந்தைகள். இந்நிலையில் குடும்பப் பிரச்னையால் அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் குழந்தை களுடன் இருந்த கதிரவன் மனமுடைந்து கடந்த 4 ஆம் தேதி எலுமிச்சை சாதத்தில் விஷத்தை கலந்து இரண்டு குழந் தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் அருத்தியுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவர்கள் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக் கிழமை இறந்தனர். கதிரவன், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.