டென்னிஸ் உலகில் ஆண்டுதோறும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் (ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, அமெரிக்கா, விம்பிள்டன்) தொடர்கள் நடத்தப்பட்டாலும் விம்பிள்டன் தொடர் முதன்மையானது. புல்வெளியில் நடத்தப்படும் இந்த தொடர் இங்கி லாந்து தலைநகர் லண்டனில் திங்க ளன்று தொடங்கியது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடை பெறும் இந்த தொடரில் பரிசுத்தொகை அதிகம் என்பதால் வீரர் - வீராங் கனைகள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கினர். தகுதி சுற்றே பரபரப்பான கட்டத்தில் நடைபெற்ற நிலையில் முதல் சுற்று ஆட்டம் திங்களன்று தொடங்கியது. செவ்வாயன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் சக நாட்டு வீராங்கனையான(15 வயது) கோரிகாபுவை எதிர்கொண்டார். கோரி காபு கத்துக்குட்டி என்பதால் வீனஸ் வில்லியம்ஸ் அசால்ட்டாக விளையாடினார். “இளம் கன்று பயம் அறியாது” என்ற பழமொழிக்கு ஏற்ப 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸை புரட்டி எடுத்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற வீனஸ் வில்லியம்ஸை 15 வயது சிறுமி கோரி காபு வீழ்த்தியது டென்னிஸ் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.