தருமபுரி,நவ.12- தருமபுரி ஆட்சியர் அலு வலகம் முன்பு தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பானது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியை அடுத் துள்ள மோளையானூர் காளி யம்மன் தெருவை சேர்ந்த வர் வடிவேல்(37). இவரது மனைவி நதியா (31). இவர் களுக்கு திருமலை என்ற மக னும், 13 வயது மகளும் உள்ள னர். கூலித்தொழிலாளியான வடிவேலும், அவரது மனைவி நதியாவும் கேரளா மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இதனால் வடிவேல் தனது மகன், மகளையும் தனது தாய் வீட்டில் விட்டுச் சென் றுள்ளார். அங்கு அவரது பராமரிப்பில் இருவரும் பள்ளிக்கு சென்று வந்தனர்.
வடிவேலின் தம்பியும் ராணுவத்தில் பணியாற்றி வருபவருமான சுரேஷூம், அவரது மனைவி மணிமேக லையும் அதே பகுதியில் குடி யிருந்து வருகின்றனர். வடி வேல் மகன் திருமலைக்கும், அவரது சித்தி மணிமேக லைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் ஒரு வருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த திருமலை, மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் இரு வரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்த னர். இதைத் தொடர்ந்து ஆத்திரம் தீராத மணி மேகலை தனது தம்பிகள் 3 பேருடன் சேர்ந்து திரு மலையை சரமாரியாக தாக்கி யும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த சம்ப வம் குறித்து தகவல் அறிந்த வடிவேல், நதியா ஆகிய 2 பேரும் கேரளாவில் இருந்து தருமபுரிக்கு வந்தனர். பின்னர், இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படு கிறது. இதனால் மன முடைந்த வடிவேல் அவரது தாயார் கந்தா, மனைவி நதியா, மகன் திருமலை, மகள் ஆகிய 5 பேரும் தரும புரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.
அப்போது, தருமபுரி-சேலம் செல்லும் சாலையில் வடிவேல் குடும்பத்துடன் நின்று மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற னர். இதனை கலெக்டர் அலுவலகம் முன்பு பாது காப்புக்கு நின்று கொண்டி ருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து வடிவேல் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசா ரணை நடத்தினர். அப்போது, எனது மகனை எந்த நேரத்தி லும் கொலை செய்யலாம். இதற்கு திருமலையை தாக் கிய மணிமேகலை மற்றும் அவரது தம்பிகள் உள்பட 4 பேரை கைது செய்ய வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து, 5 பேரையும் தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.