சென்னை,டிச.12- தமிழக கேரள நதிநீர் பிரச் சனை தொடர்பாக இருமாநி லங்களைச் சேர்ந்த அதிகாரி கள் குழுவினர் முதற்கட்ட பேச்சுவார்த்தையை சென் னையில் துவங்கியுள்ளனர். தமிழகம் - கேரளாவுக்கு இடையிலான நதிநீர் பிரச்ச னைகளுக்கு தீர்வு காண் பது குறித்து, கடந்த செப்டம் பர் மாதம் தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனி சாமி, கேரளா சென்று அம்மா நில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசி னார். அப்போது இருமாநி லங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்காக, தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம் மாநில நீர்வள ஆதாரத் துறைச் செயலாளர் அசோக் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலை யில் உள்ள தனியார் நட்சத் திர விடுதியில், இந்த குழு வினர் முதற்கட்ட பேச்சு வார்த்தையை துவங்கினர். இந்த முதல் கூட்டத்தில், பரம்பிக்குளம் ஆழியாறு நீர்திட்டம் தொடர்பாக ஆலோ சிக்கப்பட்டதாகக் கூறப்படு கிறது. மேலும் பல்வேறு கட்டங் களாக தொடர்ந்து நடை பெறவுள்ள கூட்டங்களில், பாண்டியாறு - புன்னம்புழா, நீராறு - நல்லாறு திட்டம், நெய்யாறு திட்டம், செண்பக வள்ளி நீர்வழிப்பாதை சீர மைப்பு என பல்வேறு திட்டங் கள் மற்றும் நீர்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதன் பின்னர் 2வது கட்ட பேச்சு வார்த்தை கேரளாவில் விரை வில் நடைபெற இருக்கிறது.