திருப்பூரை சிவப்பாக்கிய செந்தொண்டர் பேரணி
திருப்பூர், நவ. 17- நவம்பர் புரட்சி தினம், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக திருப்பூரில் ஞாயிறன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய செந்தொண் டர் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சோசலிசமே எதிர்காலம், சோசலிசம் நமக்கானது என்ற முழக்கத்துடன் நவம்பர் ரஷ்யப் புரட்சியின் 102ஆவது ஆண்டு தின விழா, இந்திய விடுதலை இயக்கத்தின் பெருமை மிகு பாரம்பரியம் கொண்ட கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகத்தான செந் தொண்டர் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.
ஞாயிறன்று திருப்பூர் அவிநாசி சாலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகமான தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். உடுமலையின் மலை செட்டில்மெண்டுகளில் வாழும் மலைவாழ் மக்கள் முதல், திருப்பூரின் பனியன் தொழிலாளர்கள், பல்வேறு பிரிவு உழைக்கும் மக்கள் வரை ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், குழந்தைகளும் என அனைவரும் செஞ்சட்டை அணிந்து குழுமி யிருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பு இயக்கத்தைக் கொண்டு செல்லும் முகமாக சிவப்பு பனியன்களில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முகப்புப் பக்கமான மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உருவம் பொறிக்கப்பட்டு நூற்றுக்க ணக்கானோர் அணிந்திருந்தனர்.
பேரணியின் தொடக்கமாக கட்சி அலுவல கம் முன்பாக, சோசலிசமே எதிர்காலம் என்ற விண்ணதிரும் முழக்கத்துடன் செங்கொடியை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து பேரணி புறப்பட்டது. முகப்பில் திருப்பூர் கலைக்குழுவின் தப்பாட்ட முழக்கத்துடன், குழந்தைகள் கட்டைக் கால் அணிந்து நடமானடி ஊர்வலத்தில் அணி வகுத்தனர். அதைத் தொடர்ந்து சிலம்பாட்டம், சுருள் கம்பு வீச்சு ஆட்டம் ஆகியவற்றுடன் சிறார்கள் அணிவகுத்தனர். கேரளத்து பாரம் பரிய குடைகளை ஏந்தியபடி இருபுறமும் பெண்கள் அணிவகுக்க, உயரமான செங்கொடி களை ஏந்திப் பிடித்தபடி செந்தொண்டர்கள் வந்தனர். இதையடுத்து ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் கம்பீர முழக்கம் எழுப்பி வந்தனர்.
மதவெறி மோடி ஆட்சியின் நாசகர கொள்கைகளை எதிர்த்தும், வேலை யின்மைக்கு எதிராகவும், தொழில்களைப் பாது காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்துவோம் எனவும், சோசலிசமே வெல்லும், இந்தியாவின் எதிர்காலம் இடதுசாரிகளே, பாரத நாட்டின் மணிதீபம் மார்க்சிஸ்ட் கட்சி வெல்கவே! என உற்சாகத்துடன் நம்பிக்கை முழக்கம் எழுப்பி வந்தனர். பேரணியின் முடிவில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களிலும் தொண்டர்கள் ஊர்வலமாக பின்தொடர்ந்து வந்தனர். இந்த பேரணி மில்லர், லட்சுமி நகர் வழி யாக சபாபதிபுரம் பாலம், குமரன் சாலையை அடைந்து நொய்யல் பாலத்துக்கு முன்பாக யுனிவர்சல் திரையரங்கம் அருகே நிறை வடைந்தது.
அங்கு நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், எழுத்தாளர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள் உரையாற்றினர். திருப்பூர் மாநகரம் என்றுமே செங்கொடி இயக்கத்தின் வலுவான தளமாக உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக இந்த செந்தொண்டர் பேரணி அமைந்திருந்தது.