tamilnadu

img

“குழந்தைகள் பாதுகாப்பு” தினம்: திமுக எம்எல்ஏ கோரிக்கை

சென்னை,ஜூலை 16- கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன.இந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே சோகத்தில் மூழ்கடித்தது. இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து 15 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. கேள்வி நேரத்தின்போது பேசிய கும்பகோணம் தொகுதி திமுக உறுப்பினர் அன்பழகன், “ இந்த தீ விபத்தின் நாளை “குழந்தைகள் பாதுகாப்பு” தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.