புதுதில்லி, மே 15-ஈரானிடமிருந்து இதர உலகநாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன் மீதான தடை நிறைவுற்று இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சரான ஜாவேத் ஷரிஃப் இந்தியாவுக்கு வர்த்தகரீதியிலான சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜைச்சந்தித்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து தில்லியில் செவ்வாயன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.மூன்று மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோ சனைக் கூட்டத்தில் தேர்தல் முடிவுக்குப் பின்னர் இதுகுறித்த முடிவு மேற்கொள்ளப்படும் என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் மட்டும் இரண்டாவது முறையாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்இந்தியாவுக்குப் பயணம் வந்து ள்ளார். ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்திருந்தாலும், கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்குத் தடை நீக்கப்பட்டது. இந்தியா தனது உள்நாட்டுக் கச்சா எண்ணெய்க்கான தேவை யில் 80 சதவிகிதத்தை இறக்குமதி வாயிலாகவே பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.(பிடிஐ)