தரங்கம்பாடி, ஆக.3- செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பி னர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு பெரு ந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஒன்றிய த்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சாலை சீரமைப்பு, கொரானா வைரஸ் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு, மின்விளக்கு பராமரிப்பு குறித்து ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை வை த்தனர். செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி யான நிலையில் அலுவலகம் மூடப்பட்டது. இந்நிலையில் ஊரா ட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான அண்ணா மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.