tamilnadu

இன்று காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்

புதுதில்லி, மே 22-காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் புதுதில்லியில் வியாழனன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை கூட்டம் மே 28ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்றுக்குழுவையும் மத் திய அரசு அமைத்தது.காவிரி மேலாண்மை வாரியம்கடைசியாக, கடந்தாண்டு டிசம்பர் 3 ஆம் தேதியன்று கூடிஆலோசனை நடத்தியது. ஒழுங் காற்றுக் குழு கூட்டம், ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்றது.குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் எந்த உத்தரவையும் வெளியிடவில்லை.இந்நிலையில் காவிரி ஒழுங் காற்றுக் குழு கூட்டம் தில்லியில் இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 6 மாதங்களுக்குப் பிறகு மே 28ஆம் தேதி,ஆணையத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.