மும்பை,நவ.8- மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள புதிய எம்.எல்.ஏ.க் களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் துறைக்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. முதல்வர் பதவி வேண்டும் என்ற சிவசேனையின் கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை. இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெள்ளியன்று ராஜினாமா செய்தார். இந்நிலையில், மகாராஷ்டிரா சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தேர் வான புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பாது காப்பு வழங்க வேண்டும் என்று காவல் துறைக்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக சிவசேனாவின் செயலாளர் மிலிந்த் நர்வேகர் மும்பை காவல் ஆணையருக்கு வெள்ளியன்று எழுதியுள்ள கடிதத்தில், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை சந்தித்து விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார். எனவே, புதிதாக தேர்வு செய்யப்பட்டு உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.