2 தமிழ்படங்கள் திரையிடல்
புதுதில்லி,அக். 6 - 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் 76 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள், 26 இந்திய மொழி படங்கள் மற்றும் 16 குறும்படங்கள் ஆகியவை திரையிடப்பட உள்ளன. தமிழ் மொழி யில் இருந்து பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்னன் இயக்கிய ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளன. இந்திய திரைத்துறையில் வெளி யாகி 50 வருடங்களை கடந்த புகழ் பெற்ற 12 திரைப்பங்கள் திரையிடப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையற்றவர்களுக் காக, திரையில் வசனங்களுக்கு இடையில் வரும் காட்சிகளை விளக்கி கூறும் விதமாக ஒரு சிறப்பு திரைப்படம் திரையிடப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.