மும்பை, நவ.9- மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முடிவுகள் வெளி யாகி பல நாட்கள் ஆகியும் ஆட்சியமைக்க முடியாமல் இழு பறி நிலை இருந்தது.ஆட்சியமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வரு மாறு பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்க்கு சனிக்கிழமை யன்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத் துள்ளார். வெள்ளியன்றுதான் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா கடி தத்தை கொடுத்தார். அப்போது மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு தேவேந்திர பட்னா விசை ஆளுநர் கேட்டுக்கொண்டார். தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நவம்பர் 11 ஆம் தேதிக்குள் பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கெடு விதித்துள்ளார்.