tamilnadu

img

பிறப்புரிமையை தகர்க்கும் எந்த முயற்சியையும் தடுக்க வேண்டும்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடிகர் துல்கர் சல்மான்

கொச்சி, டிச.17- மத பாகுபாட்டுக்கு வழிவகுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள பிரபல  நடிகர் துல்கர் சல்மான், மதச்சார் பின்மையும் ஜனநாயகமும் சமத்துவ மும் நமது பிறப்புரிமை எனவும் அதை  தகர்க்கும் எந்த முயற்சியையும் நாம்  தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள் ளார். அகிம்சையே நமது பாரம்பரிய மாகும். போராட்டங்கள் அமைதியான தாக இருக்க வேண்டும். சிறந்ததொரு இந்தியாவுக்காக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதோடு, ‘எல்லைக்கோடுகளுக்கு அப்பால் நம்மை இந்தியன் என்று தான் குறிப்பிடுகின்றனர்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குறிப்பின் கீழ் இந்திய வரை படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.  

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளத்தில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் ஏற்கனவே தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி உள்ள னர். அமலாபால், பார்வதி திரு வோத், ரஜிஷா விஜயன், நிமிஷா ஸஜயன், பிருதிவிராஜ், இந்திரஜித், டொவினோ தாமஸ், சன்னி வெய்னா, சித்தார்த், சன்ஜானோ காலித், அனார்கலி, கன்னட நடிகர் தந்தேவ் ராம்,  இயக்குநர்களான அனுராக் காஷ்யப், ஆஷிக் அபு உள்ளிட்டோர் நாடு முழு வதும் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.  

‘இந்தியா உனது அப்பன் சொத்தல்ல’ என எழுதிய படத்தை அமலாபாலும், ஆஷிக் அபுவும் சமூக  ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். ‘அடக்கி ஒடுக்குந்தோறும் போராட்டங் கள் பரவிக்கொண்டே இருக்கும்’ என நடிகர் டொவினோ இன்ஸ்டாகிராமில் போராட்ட படங்களுடன் பதிவி்ட்டுள் ளார். ஹாஸ்டேக் இயக்கங்களுக்கு அப்பாலும் இங்கு போராட்டங்கள் நடக்கும்! வரலாறு கற்றுத்தருவது அதைத்தான். என டொவினோ தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதே படங்களுடன் நடிகர் பிருதிவிராஜும் குரல் கொடுத்துள்ளார். ‘புரட்சி வீட்டின் முற்றத்திற்கு வந்துவிட்டது’ எனவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

‘ஜாமியாவுக்கு ஆதரவாக நிற்போம்’ என்கிற ஹாஸ்டேக்குடன் கூடிய ஊடகவியலாளர் ராணா அயூப்பின் டுவீட்டை பார்வதியும் டுவீட் செய்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டபோதே நடிகர் சன்னி வெய்னா தனது எதிர்ப்பை தெரிவித்தார். ‘ஹோம் மோன்ஸ்டர்’ (அருவருப்பான உருவம் உள்ள வளர்ப்பு பிராணி) என அமித்ஷாவை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் மீ்ண்டும் டுவீட் செய்தார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், மத்திய அரசை பாசிஸ்ட் அரசு எனவும், இனி அமைதியாக இருக்க முடியாது எனவும் டுவீட் செய்துள்ளார்.