tamilnadu

img

3 ஆண்டுகளில் 10 லட்சம் மின் வாகனங்கள்

கொச்சி .ஜூன் 30- மின்சாரத்தில் இயங்கும் வாகன போக்குவரத்து கொள்கையை அமல்படுத்துவதன் பகுதியாக 2022 ஆம் வருடத்துக்குள் 10 லட்சம் மின் வாகனங்கள் கேரளத்தில் ஓடும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கொச்சியில் சனியன்று துவங்கிய மின் வாகன கண்காட்சி மற்றும் மாநாட்டை (இ-மொபைலிட்டி காங்கிரஸ்) துவக்கி வைத்து முதல்வர் பேசியதாவது: 2 லட்சம் இருசக்கர இ-வாகனங்கள், 50 ஆயிரம் மூன்று சக்கர வாகனங்கள், ஆயிரம் சரக்கு வாகனங்கள், 3 ஆயிரம் பேருந்துகள், நூறு படகுகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது ஆறு நகரங்களில் டீசல் வாகனங்களை தடை செய்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த தீர்ப்புக்கு எதிராக தடை விதிக்கப்பட்ட போதிலும் சுற்றுச்சூலை பாதுகாப்பதில் கேரளம் உறுதியுடன் செயல்படுகிறது. அதன் பகுதியாக சிஎன்ஜி, எல்என்ஜி இயந்திரங்களின் பயன்பாடு தொடங்கியுள்ளது. கொச்சியில் 5 சிஎன்ஜி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் என்எல்ஜி பேருந்து, முதல் சூரிய சக்தி, மின்சக்தி படகுகளும் கேரளத்தில் இயங்கத் தொடங்கியுள்ளன. சென்னை ஐஐடி பேராசிரியர் அலோக் ஜுன்ஜுன்வாலா தலைமையில் அமைக்கப்பட்ட குழு மின்சார வாகன கொள்கை குறிப்பை தயாரித்துள்ளது. தொடர்ந்து பழுது நீக்கும் பணிமனைகளும் ஏற்படுத்தப்பட்டன. இங்கிருந்து கிடைத்த பரிந்துரைகளின் அடிப்படையிலும் மின்சார வாகன கொள்கைக்கு அரசு இறுதி ஒப்புதல் அளித்தது. மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு பெரும் வாய்ப்பு காத்திருக்கிறது என்று முதல்வர் தெரிவித்தார்.