tamilnadu

img

முதல் முறையாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு தமிழில் வெளியானது

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று முதல் முறையாக தமிழில் வெளியாகி உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் முக்கியமான தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது.  இதைத்தொடர்ந்து தி.மு.க. உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் கட்டிடத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  திறந்து வைத்தார். அப்போது கன்னடம், அசாமீஸ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முக்கியமான 100 தீர்ப்புகளை நீதிபதி பாப்டே அவரிடம் வழங்கினார். அதில்  தமிழ் இடம் பெறவில்லை. இது கடும் தமிழர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 
இந்த நிலையில்  இன்று தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் 113 வழக்குகளின் தீர்ப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற இணையதளத்தில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தீர்ப்புகள் வெளியாகின. சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் வழக்கு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் தமிழில் பதிவேற்றம்​ செய்யப்பட்டு உள்ளது.