சென்னை,ஆக.2- இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா வுக்கு எதிரான வழக்கு குறித்த ஆவணங்களை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் வழங்க மறுப்பதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ் வரர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு செய்த தாக இந்து சமய அறநிலையத் துறை திருப்பணிகள் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, தமிழக அரசு அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியமர்த்தக் கோரி கவிதா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் எதிர் மனுதார ராக சேர்க்கப்பட்டார். இந்நிலை யில் வெள்ளியன்று இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசார ணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்றத்தின் வாய்மொழி உத்தரவை காரணம் காட்டி இந்து சமய அறிநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா மீதான வழக்கு ஆவணங்களை பொன் மாணிக்கவேல் தர மறுப்பதாகவும், இதனால் துறை ரீதியான விசாரணை நடத்த முடியவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு தன் வசம் உள்ள ஆதாரங்க ளின் அடிப்படையில் முடிவெடுக்கும் படி அரசு தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார். கவிதாவின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.