சென்னை, மார்ச் 23- சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் விடுத்துள்ள அறிக்கை விபரம் வருமாறு: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற் பட்டுள்ளதை தடுக்க மத்திய - மாநில அரசு கள் துரிதமான நடவடிக்கை எடுத்து வரு கின்றன. நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் அனைத்தும் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள் ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஊரடங்கு கொண்டு வர மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மாநில அரசும் செவ்வாய் மாலை 6 மணி (24.3.2020) தடை உத்தரவு அமலாக்கப்படும் என அரசு அறி வித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்பிற்குள் ளாகும் வாய்ப்பு உள்ளது. தொழிற்சாலை களில் பணியாற்றும் தினக்கூலி, தொகுப்பூ தியம், ஒப்பந்த ஊழியர் உள்ளிட்ட அனை வருக்கும் நிதியிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வேலையிழப்பு ஏற்படும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர்கள் குவி யலாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்பகுதி களில் சுகாதாரம் பாதுகாக்க அரசு உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேலை யற்ற இவர்களுக்கு உணவு வழங்கும் ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும். மேலும் கட்டுமானம், வீட்டு வேலை, தையல், ஆட்டோ, டெம்போ, கால் டாக்சி உள்ளிட்ட ஏராளமான முறைசாரா தொழி லாளர்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாவார் கள். இவர்களுக்கு உரிய நிவாரணம் உடனடி யாக அறிவித்திட வேண்டும். இதர நாடு களில் அறிவித்தது போன்று கடன் தவணை ஒத்திவைப்பு, வட்டி தள்ளுபடி, மின்கட்ட ணம், குடிநீர் கட்டணம் ரத்து, வருமானம் இழந்த இவர்களுக்கு உரிய நிதி உதவி அரசு துரிதகதியில் அறிவித்திட வேண்டும். தடை உத்தரவு திரும்பப் பெறும் வரை இது போன்ற அனைத்து அத்தியாவசிய பொருட் களை வழங்கிடுவதை உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியிலும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியிலும் ஈடு படும் தொழிலாளர்களுக்கு கையுறை, முகக் கவசம், கிருமிநாசினி, சோப்பு, கைத்துண்டு உள்ளிட்டவை வழங்கி ஊழியர்களைப் பாதுகாத்திட வேண்டுமெனவும் சிஐடியு தமிழ் மாநிலக் குழு கோருகிறது.