tamilnadu

img

சிபிஎம் முயற்சிக்கு பெரும் வெற்றி புதுவையில் இன்று அரிசி விநியோகம்

புதுச்சேரி, ஏப்.9- குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு அறிவித்த பொருள்  கள் புதுச்சேரியில் வெள்ளியன்று  (ஏப்.10) முதல் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர்  அறிவித்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி  சமூக நலத்துறை மற்றும் குடி மைப்பொருள் வழங்கல் அமைச்  சர் கந்தசாமி அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளி யிட்டுள்ளது. அதில், கொரோனா (கோவிட் 19) நோய்த்தடுப்பு நடவ டிக்கைகள் காரணமாக ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி, குடும்ப அட்டை  ஒன்றுக்கு ஒரு கிலோ பருப்பு என்ற அளவில் மூன்று மாதங்க ளுக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து புதுச்சேரி யில் மேற்கண்ட இலவச அரிசி, பருப்பு வழங்குவதற்குரிய நட வடிக்கைகளை புதுச்சேரி அரசு  விரைந்து மேற்கொண்டது. அதன டிப்படையில் வரும் 10ஆம் தேதி முதல் இலவச அரிசி, பருப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது  விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கும் நடைமுறையை ரத்து செய்து  அதற்கு மாற்றாக பணம் வழங்கும் முறையை ஆளுநர்  கிரண்பேடி அறிமுகப்படுத்தினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி வித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசி யல் கட்சிகளும் சமூக நல அமைப்புகளும் பணத்துக்கு பதில் அரிசியை வழங்க வேண்டும்  என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், கொரோனா  வைரஸ் தொற்று பரவலை தடுக் கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு உத்தர வால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர்.  வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் மக்களுக்கு அரிசி கோதுமை இலவசமாக வழங்க உத்தரவிட்டது? ஆனாலும், ஆளு நர் கிரண்பேடி தடை விதித்தார். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நடவடிக்கைக்கு கடும்  ஆட்சேபம் தெரிவித்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மத்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். மேலும் அரிசி விநியோகம் செய்ய ஆளு நர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இத்தகைய பின்னணி யில் ஆளுநர் ஒப்புதல் வழங்கிய தால் அரிசி விநியோகம் துவங்கு கிறது.