tamilnadu

img

கோவில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் திடீர் ஆய்வு குடியிருப்போர் அதிர்ச்சி

இளம்பிள்ளை, பிப்.12- மகுடஞ்சாவடியில் பெரு மாள் கோவில் நிலத்தை வருவாய் துறையினர் திடீ ரென ஆய்வு செய்ததால் அப் பகுதியில் குடியிருப்போர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள மகுடஞ்சாவடி பழைய சந்தப் பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல் பட்டு வரும் இந்த கோவிலுக்கென  சொந்த மாக 36 ஏக்கர் நிலம் உள்ளன. கோயில் நிலத்தின் ஒரு பகுதியான கூடலூர் முத்து முனியப்பன் கோயில் பகுதியில் 12.22 ஏக்கர்  நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 100க்கும் மேற்பட்ட  குடியிருப்புகள் அமைந்துள்ளன. இவர்கள் கடந்த  நான்கு தலைமுறைக்கு மேல் அங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், சங்ககிரி வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்டோர் புதனன்று கோயில் நிலத்தை பார்வையிட்டனர். அப்போது, திருத்தொண்டர் சபை நிறுவனர் அல்லிக் குட்டை ராதாகிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் கஸ்தூரி, மகுட்சாவடி வருவாய் ஆய்வாளர் சித்ரா, விஏஓ உஷாபிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதில்,  கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் குடியி ருப்புகள், கடைகள் இருப்பதை பார்வை யிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், கோவில் நிலத்தில் நான்கு தலைமுறையாக வீடு கட்டி  குடியிருந்து வருகிறோம். தற்பொழுது அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதால் எங்களது வீடுகள் அகற்றப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆகவே, தமிழக அரசும், தமிழக முதல்வரும் தலையிட்டு இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு எவ்வித  பாதிப்பும் ஏற்படாத வகையில்  உடனடி யாக பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.