சேலம், ஆக.7 - சேலம் மாவட்டம், தம்மம்பட்டி 2 வது வார்டு, இந்திராநகரைச் சேர்ந்தவர் லத்தீப் மகன் சித்திக் (37) டிரைவர். இவர் செவ்வாயன்று இரவு நாகியம்பட்டி மது கடை பகுதியில்இருசக்கர வா கனத்தில் நின்றுகொண்டிருந்தார். அப் போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், அவரிடம் வழி கேட்பது போல் கேட்டு, கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றதாக தெரிகிறது. இதன்பின் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து ஆத்தூர் டி.எஸ்.பி. ராஜூ உத்தரவின் பேரில், வீரகனூர் காவல்துறையினர் நள்ளிரவில் தீவிர சோத னையில் ஈடுபட்டனர்.அப்போது வழிப்பறிக்கொள்ளையில் ஈடுபட்ட நாகியம்பட்டி சோப்புமண்டி பூவேந்தன் (23), அர்ஜூன் (20), அர்ஜூன் (18), கார்த்திக் (17), அருண்குமார் (22), மோகன் ராஜ் (24) ஆகிய 6 பேர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, செல் போன்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் காவல்துறையினர்பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.