சேலம், செப்.12- மருத்துவர்களின் தவறான சிகிச் சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக கூறி மருத்துவ மனையை அப்பெண்ணின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் நால் ரோடு பகுதியில் சேலம் பாலி கிளினிக் என்ற தனி யார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனையில் தருமபுரி மாவட்டம், லலிகம் பகுதியை சேர்ந்த இளைய ராஜா என்பவரின் மனைவி வெங்கட் அம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக புதனன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் பின் உறவினர்களிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் கர்ப்பிணி யான வெங்கட் அம்மாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாக தெரிகிறது. இந்த அறுவை சிகிச்சையின்போது மருத்துவர் களின் அலட்சியம் காரணமாக வெங்கட் அம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவர்களின் அலட்சிய போக்கை கண்டித்து வெங்கட் அம்மாளின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் அமர்ந்து நீதி கேட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தவறான சிகிச்சை அளித்த மருத் துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி உறவினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இந்த முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து மருத்துவமனை வளா கத்தில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.