tamilnadu

img

டாஸ்மாக்கை சுற்றி தடுப்புவேலிகள் அமைப்பு 

இளம்பிள்ளை, மே. 6 -
தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படவுள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்க்க இளம்பிள்ளையில் டாஸ்மாக்கைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக அரசு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. தற்சமயம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் ஒரு பகுதியாக தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் மே 7 ஆ  தேதி முதல் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. இதனால் மது பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மதுபாட்டில்களை வாங்க வருவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு இருபுறமும் பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.