tamilnadu

ஜவுளிக்கடை முன் குப்பை கொட்டிய விவகாரம் துப்புரவு மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்

இளம்பிள்ளை, செப்.25- சேலம் மாவட்டம்,  இளம்பிள்ளை பேரூ ராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் பொன்னுசாமி (55). இவர் கடந்த புதனன்று  இளம்பிள்ளை கேவிபி தியேட்டர் ரோடு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை அபரா தம் என்கிற பெயரில் அப்பகுதியிலுள்ள கடைகளில் விதிமீறி வசூலில் ஈடுபட்டுள் ளார். இதில் பணம் தரமறுத்த ஜவுளிக்கடை முன்பு குப்பைகளைக் கொட்டி சென்றுள் ளார். இதுதொடர்பான செய்திகள் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் மற் றும் சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுறுத்தல்படி பொன் னுசாமியை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவ லர் உத்தரவிட்டுள்ளார்.