சேலம் என்றதும் விளையாட்டு உலகில் ஞாபகத்திற்கு வருவது மாரியப்பன். அந்த வரிசையில் இடம்பிடித்திருப்பவர் கராத்தே நட்ராஜ். 38 வயதாகும் நடராஜின் சொந்த ஊர் எடப்பாடி அடுத்து இளம்பிள்ளை அருகே உள்ள அத்தனூர் தப்பகுட்டை. அந்த குக்கிராமம் இன்றைக்கு பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஜப்பான் வரைக்கும் தெரிந்திருக்கிறது.
சகலகலா மன்னவன்...
மாணவப் பருவத்தில் வறுமை அவரது குடும்பத்தை துரத்தியதால் படிப்பை தொடர முடியாத சூழல். எட்டாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். ஆனாலும் அவரது மனதுக்குள் தீப்பிழம்பாக எரிந்து கொண்டே இருந்த அந்த கனல் மட்டும் அணையவில்லை. 14 வயதில் கராத்தே பயிற்சியை துவக்கினார். இது வரைக்கும் 6 பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். கராத்தே மட்டுமின்றி சிலம்பம், தேக்வாண்டோ, மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக், யோகா என பல்வேறு பாரம்பரிய கலைகளில் தேசிய அளவிலான பயிற்சியை முடித்திருக் கிறார்.
வல்லவனுக்கு வல்லவன்...
உலக வரலாற்றில் முதல் முறையாக தனியொரு மனிதனாக ஒரு இந்திய னாக, ஒரு தமிழனாக, ஒரு தற்காப்புக் கலைஞனாக 100 சாதனைகள் படைத்து வரலாறு படைக்க வேண் டும் என்ற லட்சியத்தோடு களம் இறங்கி 95 சதவீதம் நிறைவு செய்திருக்கிறார். இவரது சாதனையை நேரில் கண்டுகளிக்க தப்ப குட்டை கிராமத்திற்கு வந்த ஜப்பான் பிரதிநிதிகள் முன்னிலை யில் ஒரே மேடையில் அதுவும் அவரது வீட்டிலேயே 10 க்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான சாகசங்கள் செய்து அசத்தினார். கைகளின் துணையோடு வாய்க்குள் 750 ஸ்ட்ராக் களை (உறிஞ்சு குழல்) வைத்தும், கைகளின் துணை இல்லாமல் 700 ஸ்ட்ராக்களை வைத்தும், மூக்கினுள் ட்ரில்லிங் மிஷினை ஓட விட்டும் அமர்க்களப்படுத்தினார். மூக்கின் இரண்டு துலையின் வழியே 25க்கும் மேற்பட்ட ஆணிகளை மாற்றி மாற்றி விட்டும், வாய்க்குள் 45 மெழுகுவர்த் தியை பற்றவைத்தும், இரண்டரை கிலோ எடையுள்ள 16 பீர்க்கங் காயை வாயில் வைத்தும், ஒரு டஜன் ரப்பர் பந்துக ளை வாயில் வைத்தும், மரத்தில் தலைகீழாக தொங்கியபடி தண்ணீர் குடித்தும் பத்துக்கும் மேற்பட்ட சாகசங்களை இடைவிடாமல் செய்து வரலாற்று சாதனையை படைத்தார். இதற்கு முன்பு,ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் 459 ஸ்ட்ராவை வாயில் நுழைத்தும், மும்பையின் ரிஷி 496 ஸ்ட்ராவை கையால் பிடித்து வாயில் வைத்து நடத்தியதும் சாதனையாக இருந்தது. இதனை சேலம் நடராஜன் முறியடித்தார். 2015 ஆம் ஆண்டு கனடா நாட்டின் பர்னாபி கியூ ஆர் பெக்ஸ் 4 அங்குல ஆணிகளை 30 வினாடியில் 15 முறை மூக்கில் நுழைத்ததையும் சேலம் நடராஜன் முறியடித்தார்.
கடல் தாண்டும் சாகசம்...
சிலிண்டரை நகத்திலும், மீசை முடியிலும் தூக்கியும், பொலிரோ காரை தலை முடியாலும், டவேரா காரை குரல்வளையாலும், நெற்றியால் மகேந்திரா வேனையும், பற்களால் டிராக்டரை இழுத்தும் அவரது சாதனையை அவரே முறியடித்து கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தார். இவரது சிந்தனைகளை கண்டு களித்த ஜப்பான் பிரதிநிதி கள் வெகுவாக பாராட்டிய தோடு அந்த நாட்டிலும் ஒளிபரப்பு செய்வதாக அறிவித்து இருப்பது தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாகும். இவரது சாதனையை மத்திய அரசும், தமிழக அரசும் அங்கீகரிக்க வில்லை என்றாலும் ஜப்பான் பிரதிநிதிகளும் பொதுமக்களும் அங்கீகரித்திருக்கிறார்.
வெற்றிப்படிகள்...
கராத்தே கலையில் சாதிக்க நினைத்த இவருக்கு தடைகள் ஏராளம்.. ஏராளம்... அன்றைக்கு எடுத்த வைராக்கியம் தான் தனக்கென்று ஒரு அடையாளம். அதுவும் தனது உடல் பாகங்கள், உறுப்புகளை கொண்டு வித்தியாசமான இந்த சாகசங்கள். இதுவரைக் கும் 95 சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.மிக விரைவில் நூறாவது சாதனையை நிறைவு செய்யள்ளார். இதற்காக அவர் பட்ட அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அவரது திறமையை மேலும் ஊக்கப்படுத் துவதை காட்டிலும் கேலி, கிண்டல் என காயப்படுத் தியதே அதிகம். ஆனால் இதை எதையும் அவர் பெரிதாக கண்டுகொள்ள வில்லை தனது திறமை மீது நம்பிக்கை வைத்து களமிறங்கினார். இன்றைக்கு உலகமே திரும்பிப் பார்க்கிறது.
துரத்தும் வறுமை....
வசதி வாய்ப்புகள் இல்லாத வறுமையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோருக்கு இலவசமாக கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். அவர்களின் திறமையை முழுமையாக வெளிக் கொண்டுவர முடியவில்லை. காரணம் நிதி பற்றாக்குறையாகும். இதற்காக “பாரம்பரிய கலைகளின் சங்கமம்” என்கிற அறக்கட்டளை மூலம் அவர்களது திறமை களை அங்கீகரித்து பாராட்டி ஊக்குவித்தும் வருகிறார். “வேர்ல்ட் சூப்பர் டேலண்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” என்ற அமைப் பையும் உருவாக்கி ஏழை மாணவர்களின் திறமைக ளை முழுமையாக வெளிக் கொண்டுவந்து அங்கீகாரம் உரிய அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற 9 வயது சிறுவன் சண்முக வேல் 30 கிலோ மீட்டர் தூரத்தை 3.16 நிமிடங்க ளில் கடந்து சாதனை படைத்திருக்கிறான். காங்கேயம் சிறுமி தனது 13 வயதில் 50 கிலோ மீட்டர் தூரத்தை மிகக் குறைந்த நேரத்தில் ஓடி சாதனை படைத்திருக் கிறார்.
தாய் எட்டடி என்றால்...
மனைவி பாலசரஸ்வதி, மகள், மகன் ஆகிய மூவருமே நடராஜன் பயிற்சியில் கராத்தே பிளாக் பெல்ட் வாங்கியுள் ளளனர்.மாநில அளவி லான போட்டிகளில் பங்கேற்கும் அசத்தியிருக் கிறார்கள். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக தந்தை வழியில் வித்தியா சமான சாகசங்களை நிகழ்த்தி வருகிறார்கள். இளம்பிள்ளை அரசு மாதிரி பள்ளியில் படித்து வரும் 16 வயதாகும் மகள் தேவிப் பிரியாவும், 14 வயது மகன் சௌந்தரராஜனும் 870 கிலோ எடை கொண்ட ஒரு ஆம்னி வேனில் கூடுதலாக மாணவர்களை ஏற்றிக் கொண்டு 1,700 கிலோவை தலையால் முட்டி நகர்த்தினர். தலையால் கொடுத்த அழுத்தத்தில் ஒரு நிமிடத் திற்குள் சௌந்தரராஜன் 331அடியும், தேவிப்பிரியா 351 அடிக்கும் நகர்த்தி ‘உலக சூப்பர் புக் ஆப் ரெக்கார்ட்ஸில்’ உலக சாதனையாளர்களாக இடம் பிடித்தனர்.
முதல்வரின் கருணை...
பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் கராத்தே பயிற்சி மூலம் கிடைக்கும் மிக சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நகர்த்தி வரும் நடராஜன்,சாகசங்களில் கின்னஸ் சாதனை படைத்து இருப்பதோடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு படிப்பில் ஆர்வம் காட்டி னார். இதுவரைக்கும் ஆறுக்கு மேற்பட்ட முதுகலை பட்டம் இவரை முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுவை முன்னாள் முதல் வர் என்.ஆர். ரங்கசாமி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உச்சநீதி மன்ற நீதிபதி என பலரும் பாராட்டியுள்ளனர். யோகா புஷ்கின், பல்கலை செம்மல், நல் மாமணி என 15க்கும் மேற்பட்ட விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், உரிய அங்கீ காரமும் அரசுப் பணியும் வழங்காதது ஏன்? என்பது புரியாத புதிராகவே உள்ளது. தனது சொந்த ஊரான எடப்பாடி அருகில் குக்கிராமத்தில் பிறந்து பாரம்பரிய கலைகள் மற்றும் சாகசங்களில் அசத்தி வரும் நடராஜனை ஒரு சாதனையாளனாக பார்க்கவில்லை என்கிற குறையை களைந்திட கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கருணை காட்ட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாகும்.