சேலம், ஜூன் 20- சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாமல் இருந்த 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பிரபல தனியார் நிறுவனத்தின் ஐந்து தியேட்டர் கொண்ட மல்டிபிளக்ஸ் திரை யரங்கு செயல்பட்டு வருகிறது. இந்த திரை யரங்கு நிர்வாகமானது கடந்த ஓராண்டு காலமாக 30 சதவிகித கேளிக்கை வரி மாந கராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும். ஆனால் திரையரங்க நிர்வாகம் சேலம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கேளிக்கை வரியை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில் புதனன்று மாநகராட்சி அதிகாரிகள் கேளிக்கை வரி ரூ.30 லட்சம் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த இந்த தனியார் நிறுவன திரையரங்குகளுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து ஐந்து திரை யரங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.