சேலம், டிச. 21- சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் சொத்து தகராறு காரணமாக தந்தையை மகன் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (55). தச்சு தொழிலாளி. இவருக்கு 3 மகன்கள் உள் ளனர். இளைய மகன் சீனிவாசன் திருமண மாகி, தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசன் மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறில் ஈடு பட்டதால் மனைவி பிரிந்து சென்று விட்டார். மேலும் சொத்தை பிரித்து தரும்படி தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். வெள்ளியன்று இரவு தந்தை-மகன் இரு வருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மதுபோதையில் இருந்த சீனிவாசன், தந்தையை தச்சு உளியால் குத்தி உள்ளார். இதில் ராமசாமி சம்பவ இடத்திலேயே பலி யானார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். தந்தையை கொலை செய்த சீனி வாசனை போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். தந்தையை மகன் குத்தி கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.