tamilnadu

img

பொறியாளர் தின விழா கொண்டாட்டம்

சேலம், செப்.19-  சேலத்தில் பொறியாளர் தின விழா வியாழனன்று கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் பாரத ரத்னா சார் விஸ்வேஸ் வரய்யாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் தேதி பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வரு கிறது. அதன்படி இன்ஸ்டியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் இந்தியா சார்பில் 52ஆவது பொறி யாளர்கள் தின விழா கொண்டாட்டம் சேலம் குரங்கு  சாவடி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில்  நடைபெற்றது. இதில் இன்ஸ்டியூஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் முனைவர் குண ராஜா பங்கேற்று பொறியாளர் துறையின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.  மேலும் வளர்ந்து வரும் இளம் பொறியாளர் களுக்கு, பொறியியல் துறையில் சாதனை படைக்க கருத்துகளை எடுத்துக் கூறினார். தொடர்ந்து சேலம்  மாவட்டத்தில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற் பட்ட பொறியாளர்கள் மற்றும் பொறியியல் பயிலும்  மாணவர்கள் கலந்து கொண்டனர்.